நடிகர் வடிவேலுக்கு நடிக்க தடை⁉
🎥‘இம்சை அரசன் 24ம் புலிகேசி-2' படத்தில் நடிக்க நடிகர் ⭐வடிவேலு மறுத்ததால்🚫 அந்த படத்தின் 💸தயாரிப்பாளரான இயக்குனர் 🎬ஷங்கர் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தார்😯. அந்த புகார் நடிகர் சங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது🙄. நடிகர் சங்கம் சார்பில் ⭐வடிவேலுவிடம் விளக்கம் கேட்டு 2 கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டன👍. அதற்கு பதிலளிக்கும் விதமாக, திட்டமிட்டபடி 📹படப்பிடிப்பை தொடங்காததால் தனக்கு 💸பொருளாதார இழப்பும் மன உளைச்சலும் ஏற்பட்டு உள்ளது😟 என்றும், தற்போது வேறு 🎥படங்களுக்கு 📆தேதி ஒதுக்கி நடித்து வருவதால் 🎥'இம்சை அரசன் -2' படத்தில் நடிக்க முடியாது🚫 என்றும் தெளிவுபடுத்தி வடிவேலு, நடிகர் சங்கத்துக்கு கடிதம் அனுப்பி உள்ளார்📄. இதைத்தொடர்ந்து வடிவேல் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து 💸தயாரிப்பாளர்கள் சங்கம் ஆலோசித்து🤔 வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. படங்களில் நடிப்பதற்கு அவருக்கு தடை🚫 விதிக்கப்படலாம்😱 என்று தயாரிப்பாளர்கள் சங்க வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது🔈. தடை விதித்தால் அதை எதிர்த்து😡 நீதிமன்றம்🏛 செல்வது குறித்து வக்கீல்களுடன் ⭐வடிவேல் ஆலோசிப்பதாக கூறப்படுகிறது😳.
COMMENTS