காலாவதியான குளிர்பானம் 25 ஆயிரம் பாட்டில் பறிமுதல்
⛰பழநியில் பிரபல குளிர்பான கம்பெனியின்🏢 குடோனில் இருந்து காலாவதியான 25 ஆயிரம் பாட்டில்கள்🍾 பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை😳 ஏற்படுத்தி உள்ளது. கோயில்🙏 நகரான திண்டுக்கல் மாவட்டம் பழநிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும்🚊, வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் 30 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள்👥 வந்து செல்கின்றனர். பக்தர்கள் வாங்கும் குளிர்பானங்களில்🍾 பெரும்பாலானவை காலாவதியானவையாக😯 இருப்பதாக புகார் எழுந்தது🗣. இதன் அடிப்படையில் நேற்று இரவு🕘 பாதுகாப்பு அதிகாரிகள் புதுதாராபுரம் சாலையில்🛣 உள்ள தனியார் குளிர்பான நிறுவன ஏஜென்சியின் குடோனை திடீர் சோதனை🔎 செய்தனர். சோதனையில், 25 ஆயிரம் குளிர்பான பாட்டில்கள்🍾 காலாவதியாக இருப்பது தெரிய வந்தது😯. அவற்றை பறிமுதல் செய்த 👮அதிகாரிகள் குடோனை பூட்டினர்🔒.
COMMENTS