திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் நடத்தும்
கரன்சி எக்ஸ்போ 2018 !!
🙂 சேகரிப்புக் கலையில் நாம் அறிந்து வைத்த விஷயங்களை கொண்டு சேகரித்து வருகிறோம். ஆனால் நாம் சேகரிப்பு கலையில் அறிந்திட பல விஷயங்கள், நுட்பங்கள் நடைமுறையில் உள்ளது.
🙂 மேலும் சேகரிப்பு கலையில் உள்ள நவீன கண்டுபிடிப்பு, கருவிகள், தொழில்நுட்பங்கள் மற்றும் சேகரிப்பு சார்ந்த விஷயங்களை நாம் அறிந்து கொள்ளும் வகையில் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.
🙂 அந்த வகையில் வருகிற ஜூலை 13 முதல் 15ம் தேதி வரை திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீநிவாசா ஹாலில் மாபெரும் கரன்சி எக்ஸ்போ - 2018 என்ற தலைப்பில் பணத்தாள்கள் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.
🙂 கண்காட்சி நடைபெறும் நாள் : ஜூலை 13, 14,15ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
🙂 நடைபெறும் நேரம் : காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை
🙂 கலந்து கொள்வதற்கான கட்டணம் - முற்றிலும் இலவசம்.
🙂முகவரி :
ஸ்ரீநிவாசா ஹால்
மத்திய பேருந்து நிலையம் அருகில்
திருச்சிராப்பள்ளி
🙂அரங்கு முன்பதிவு செய்ய : 9842412247,
9171115115, 9842356473
கண்காட்சியின் சிறப்பம்சங்கள் :
🙂 கண்காட்சியில் பாரம்பரிய பொருட்கள், சர்வதேச பணத்தாள்கள், நாணயங்கள், அஞ்சல் தலைகள், ஆல்பம் போன்றவை அரங்கில் இடம்பெற உள்ளது.
🙂முதல் நாள் பணத்தாள்கள் கண்காட்சி , இரண்டாம் நாள் நாணயங்கள் கண்காட்சி, மூன்றாம் நாள் பாரம்பரிய பொருட்கள் கண்காட்சி நடைபெறுகிறது. நிகழ்வில் வரலாற்று ஆய்வாளர்கள், பணத்தாள்கள், நாணயங்கள், அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்க உள்ளனர்.
🙂 சேகரிப்புக் கலை நூல்கள் / பொருட்கள் பற்றி மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக அரங்குகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் சேகரிப்பு கலை சார்ந்த அரங்குகளுக்கு முன்பதிவு நடைபெற்று வருகிறது.
🙂 விருப்பமுள்ளவர்கள் சேகரிப்புக் கலை சார்ந்த பொருட்களை கொண்டு அரங்குகள் அமைத்து மற்ற சேகரிப்பாளர்களுக்கு தங்களுடைய சேகரிப்பு பொருட்களை பற்றிய தகவல்களை தெரியப்படுத்தலாம்.
COMMENTS