புதிய காற்றழுத்த தாழ்வு நிலை-வானிலை மையம் அறிவிப்பு
தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளது😳. வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை உட்பட தமிழக 🌊கடலோர மாவட்டங்கள் பலவற்றிலும், புதுவையிலும் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது😱. அடுத்த 24 மணி நேரத்தில் தென்தமிழகம், டெல்டா மாவட்டங்களின் அநேக இடங்களில் கனமழை முதல் மிக ☔கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது😟. இந்நிலையில் 🌊வங்கக்கடலில் இலங்கை அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது😯. இதனால் டெல்டா மாவட்டங்களில் மிக ☔கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வும் மையம் எச்சரித்துள்ளது⚠. ஏற்கனவே இருந்த காற்றழுத்த தாழ்வுநிலை வலுவிழந்து விட்டதாகவும்😯 என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது🔈 என்பது குறிப்பிடத்தக்கது😯.
COMMENTS