மணல் குவாரிகள் அனைத்தும் மூடப்பட வேண்டும்-உயர்நீதிமன்றம்
வருங்கால சந்ததிகளின் நலனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் செயல்படும் அனைத்து மணல் குவாரிகளையும் அடுத்த 6 மாதங்களுக்குள் மூட வேண்டும் என்ற அதிரடி உத்தரவை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், இறக்குமதி மணல் மூலம் மணல் தேவையை பூர்த்தி செய்ய வேண்டுமே தவிர, புதிதாக எந்த மணல் குவாரிகளையும் திறக்கக் கூடாது. சோதனைச் சாவடிகளில் கேமரா பொருத்தி சட்டவிரோதமாக மணல் கொண்டு செல்லப்படுவதை தடுக்க வேண்டும் என்றும், சட்ட விரோதமாக மணல் அள்ளப்பட்டு வருவதால் விவசாயம் மற்றும் வருங்கால சந்ததியினர் பாதிக்கப்படுவார்கள் என்பதை மனதில் கொண்டும் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
COMMENTS