நெடுவாசல் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளது
ஹைட்ரொ கார்பன் திட்டத்திற்கு 🚫எதிராக 174 தினங்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நெடுவாசல் மக்கள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளனர்😯. ஹைட்ரொ கார்பன் திட்டத்திற்கு எதிராக கடந்த மார்ச் மாதம் 16ந் தேதி தொடங்கிய நெடுவாசல் மக்களின் போராட்டம் இரவும் பகலுமாக தொடர்ந்து நடந்து வந்தது😱. இந்தப் போராட்டத்தில் நெடுவாசலை சுற்றியுள்ள கிராம மக்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், 🌱விவசாய அமைப்பினரும், 👩பெண்களும் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தனர்👍. இதனையடுத்து, மக்களின் விருப்பத்திற்கு 🚫எதிராக இந்த திட்டம் அமல்படுத்த படாது என்று 🏛மத்திய, மாநில அரசுகள் தெரிவித்ததை🔈 அடுத்து இந்த போராட்டம் கைவிடப்பட்டது😯.
ஆனால் மீண்டும் 🏛மத்திய அரசு இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து ✍கையெழுத்திட்டது. இதனால் மீண்டும் கடந்த ஏப்ரல் மாதம் 12ம் தேதி முதல் போராட்டம் துவங்கியது😟. தொடர்ந்து 174 நாட்களாக நடந்து வந்த இந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ் தெரிவித்துள்ளார்🎙 என்பது குறிப்பிடத்தக்கது😯.
COMMENTS