மருத்துவர்கள் நோயாளிகளிடம் கடினமாக நடந்துகொண்டால😳பணி நீக்கம்-விஜயபாஸ்கர்
சிவகங்கையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட மாநில சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் 📰செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்😯. அப்போது அவர் கூறுகையில்🎙, "டெங்கு காய்ச்சலுக்கு நோயாளிகள் ஊசி போடச்சொல்லி மருத்துவர்களை கட்டாயப்படுத்த கூடாது, அவ்வாறு செய்தால் பாதிப்புகள் ஏற்படக்கூடும்" என்று கூறினார்😱. அதனை தொடர்ந்து🎙, "744 எம்.டி. மற்றும் எம்.எஸ். மருத்துவர்களை நியமிக்க சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. விரைவில் மருத்துவர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள்" என்று கூறினார்👍. மேலும் அவர், நோயாளிகளிடம் கடினமாக நடந்துகொள்ளும் 🏥மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள் மீதும் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்👍 எனவும் தேவைப்பட்டால் புகாருக்கு உள்ளானவர்கள் பணி நீக்கமும்🚫 செய்யப்படுவார்கள் என்றும் ⚠எச்சரிக்கை விடுத்துள்ளார்😳.
COMMENTS