அமைச்சர்கள் விஜயபாஸ்கர், காமராஜ், வீரமணி, மற்றும் சிலரது கட்சி பதவிகள் பறிக்கப்பட்டது
மாவட்ட செயலாளர்களாக இருக்கும் அமைச்சர்கள் ஆர்.காமராஜ், எம்.ஆர்.விஜயபாஸ்கர், வீரமணி ஆகியோரது பதவி பறிக்கப்படுவதாக தினகரன் கூறியுள்ளார்🎙. இது குறித்து அவர் அறிவித்துள்ள🔈 அறிக்கை📜 வருமாறு👇
🔰 திருவாரூர் மாவட்ட ஆட்சியராக இருக்கும் காமராஜை நீக்கிவிட்டு, எஸ்.காமராஜ் என்பவர் நியமிக்கப்படவுள்ளார்
🔰 கரூர் மாவட்ட செயலாளராக இருக்கும் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் நீக்கப்பட்டு செந்தில்பாலாஜி நியமிக்கப்படவுள்ளார்.
🔰 வேலூர் மாவட்ட செயலர் பொறுப்பிலிருந்து அமைச்சர் வீரமணி நீக்கப்பட்டு, ஆம்பூர் தொகுதி எம்எல்ஏ ஆர்.பாலசுப்ரமணி நியமிக்கப்படுகிறார்.
🔰 தென்சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் விருகை ரவி நீக்கப்பட்டு முன்னாள் அமைச்சர் செந்தமிழன் நியமிக்கப்படுகிறார்.
🔰 திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலர் பதவியிலிருந்து பலராமன் நீக்கப்பட்டு, பூந்தமல்லி எம்எல்ஏ ஏழுமலை நியமிக்கப்படுகிறார்.
🔰 புதுக்கோட்டை மாவட்ட செயலர் பொறுப்பிலிருந்து வைரமுத்து நீக்கப்பட்டு, கார்த்திகேயன் நியமிக்கப்படுகிறார்.
🔰 காஞ்சிபுரம் மத்திய மாவட்ட செயலர் பொறுப்பிலிருந்து ஆறுமுகம் நீக்கப்பட்டு கோதண்டபாணி நியமிக்கப்படுகிறார்.
🔰 அமைப்பு செயலாளராக இருக்கும் சுதா கே. பரமசிவன் நீக்கப்பட்டு, எஸ் முருகன், குடவாசல் எம்.ராஜேந்திரன், வேலாயுதம் ஆகியோர் அப்பதவியில் நியமிக்கப்படுகின்றனர்.
இவ்வாறு தினகரன் 🔈வெளியிட்டுள்ள 📜அறிக்கையில் கூறப்பட்டுள்ளது😳.
COMMENTS