வங்கிகளில் பாதுகாப்பு போதுமான அளவில்லை
கடந்த 6 மாதங்களில் மட்டும் சென்னையில் பல்வேறு 🏦வங்கி வாடிக்கையாளர்களின் கணக்குகளில் இருந்து 💻ஆன்லைன் மூலம் பணம் திருடப்படுவது தொடர்ந்து வருகிறது😯. இதனை தடுக்கும் பொருட்டு அனைத்து வங்கியின் தகவல் தொழில் நுட்ப பிரிவு அதிகாரிகளை அழைத்து, விழிப்புணர்வு கூட்டம் ஒன்றை நடத்தினார் சென்னை போலீஸ் 👮கமிஷனர் விஸ்வநாதன்👍.வங்கிகளின் வாடிக்கையாளர்களின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளில் இருந்தும், ஓடிபி எண்ணை திருடியும் ஆன்லைன் மோசடிக் கும்பல் லட்சக்கணக்கில் பணம் திருடுவதாக வரும் புகார்கள் அதிகரித்துள்ளதாக தெரிவித்தது காவல்துறை😳. வங்கிகளின் பணபரிவர்த்தனையில் உள்ள பாதுகாப்பு குறைபாடே இத்தகைய சம்பவங்கள் தொடர காரணம் என்றும் சுட்டிக்காட்டினர்🙁.
சென்னையில் உள்ள 🏦வங்கிகளின் பட்டியலில் பாதுகாப்பு இல்லாத வங்கிகள் மொத்தம் 34 இடம்பெற்றுள்ளது😱. இவ்வாறு பாதுகாப்பற்ற வங்கிகள் குறித்து நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, அனைத்து வங்கிகளும் இணைந்து, ரிசர்வங்கியின் ஒப்புதலுடன் இரண்டடுக்கு பாதுகாப்புடன் பணபரிவர்த்தனையை மேற்கொள்ளும் புதிய முறையை கொண்டுவருவதற்கான முயற்சியை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளனர்🔈.
COMMENTS