சென்னை உயர்நீதிமன்றத்தில் திடீர் தீ - அணைக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரம்♨*
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெனரேட்டர் அறையில் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் போராடி வருகின்றனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெனரேட்டர் அறையில் இன்று காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அதிக புகை வெளியாவதை கண்டு அங்கு இருந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.
வெயில் காலம் குறைந்து வரும் நிலையில் சென்னையில் அடுத்தடுத்து பல இடங்களில் தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பு சென்னை திநகர் சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க முடியாது.
தற்போது அந்த கட்டிடம் அரசு சார்பில் இடிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து புதுபேட்டையில் வணிக வளாகத்தில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது.
இந்நிலையில் தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ள
COMMENTS