தினகரனுக்கு அறிவுரை வழங்கிய சசிகலா
🌱இரட்டை இலை சின்னத்திற்கு 💸லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் சிக்கிய தினகரன் டெல்லி திஹார் ⛓சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்😳. இந்நிலையில் இவருக்கு 🏛உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டதை அடுத்து, சென்னை திரும்பினார் தினகரன்👍. இதனை அடுத்து அவர் பெங்களூரு ⛓சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவை சந்திக்க தனது ஆதரவாளர்களுடன் சென்றார்😯. இந்த சந்திப்பு குறித்து அவரிடம் கேட்டபோது🎙, 'அதிமுகவின் இரு அணிகளும் இணைய இன்னும் 60 நாட்கள் வரை பொறுத்திருப்போம்' என்று சசிகலா அறிவுறுத்தியதாக கூறினார்😯.
மேலும் அவர் கூறுகையில்🎙, "கட்சியிலிருந்து தன்னை ஒதுங்கச் சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை. கட்சியிலிருந்து ஒதுங்கச் சொல்லும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு மட்டுமே உள்ளது. அந்த வானளாவிய அதிகாரம் ஜெயக்குமாருக்கு யார் கொடுத்தது❓அமைச்சர்கள் யார் மீதோ இருக்கும் பயத்தில்தான் இவ்வாறு பேசுகிறார்கள்" என்று கூறினார்🔈. இதனை அடுத்து, தனது கட்சி பணிகளை தொடரவுள்ளதாகவும் கூறினார்🎙 என்பது குறிப்பிடத்தக்கது.
COMMENTS