விவசாய நிலத்தை கொண்டு கல்வி கடன் வழங்கலாம்-உயர்நீதிமன்றம்
📚எம்பிபிஎஸ் படிக்க கல்விக்கடன் கேட்ட மாணவனுக்கு கடனை வழங்க 🏦இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது⚖. விழுப்புரத்தை சேர்ந்த சம்பத்குமார் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்திற்கு மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்😯.அதில் அவர்✍, "நான் ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். பிளஸ் 2 தேர்வில் 95.75% மதிப்பெண் பெற்றுள்ளேன்.எனக்கு மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் உள்ள டெர்னா மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் சீட் கிடைத்துள்ளது. எப்படியாவது டாக்டராக வேண்டும் என்ற எண்ணத்துடன் கல்விக் கடன் கேட்டு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிடம் விண்ணப்பித்தேன். ஆனால் அவர்கள் கல்வி கடனுக்கு விவசாய நிலத்தை வைத்து தர முடியாது என்று கூறிவிட்டனர். அவர்களை எனக்கு கல்வி கடன் கொடுக்க கோரி உத்தரவிடும்படி கேட்டு கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்😯.
இந்த மனுவானது இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது🙂. அப்போது நீதிபதி கூறியது என்னவென்றால், "கல்விக்கடன் வாங்குவதற்கு விவசாய நிலத்தை ஈடாக வைப்பதில் எந்த தடங்கலும் இல்லை என்று பதில் தரப்பட்டுள்ளது. கல்விக்காகத்தான் மனுதாரர் கடன் கேட்கிறார். உயர் கல்விக்காகத்தான் கல்விக்கடன் என்ற திட்டமே கொண்டுவரப்பட்டுள்ளது. எம்பிபிஎஸ் படிப்பை முடித்தவுடன் மனுதாரரிடமிருந்து கல்விக் கடனை வசூலிக்க முடியும். அதனால், வங்கி கல்விக்கடன் விஷயத்தில் அச்சப்படத் தேவையில்லை." என்று உத்தரவிடப்பட்டது⚖.
மேலும், "மனுதாரரின் கோரிக்கையை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பரிசீலித்து அவருக்கு முன்னுரிமை அளித்து கல்விக்கடன் வழங்க வேண்டும். இந்த நடைமுறையை 4 வாரத்திற்குள் சம்மந்தப்பட்ட வங்கி அமல்படுத்த வேண்டும்." என்றும் கூறியது 🏛உயர்நீதிமன்றம் என்பது குறிப்பிடத்தக்கது👍.
COMMENTS