ஹெலிகாப்டர் மூலம் ஊட்டியின் அழகை இனி பார்த்து ரசிக்கலாம்
இந்தியா சுற்றுலா தளங்களில் தமிழகம் முன்னிலை வகித்து வருகிறது👍. வெளி மாநில மற்றும் வெளிநாட்டவர்கள் அதிகம் சுற்றுலாவிற்காக தமிழகத்தை நோக்கி தான் படை எடுத்து வருகின்றனர்😯. தமிழகத்தில் அதுவும் மலை பிரதேசமான ஊட்டியை பிரதான சுற்றுலா தளமாக மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்👌. இத்தகைய சிறப்பு மிக்க ஊட்டியை 🚁ஹெலிகாப்டர் மூலம் சுற்றிப்பார்க்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக சுற்றுலா வளத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்துள்ளார்🔈. மேலும், அவர் கூறுகையில்🎙, ரோபோ கார் திட்டம் குறித்தும் முதல்வருடன் பேசவுள்ளதாக தெரிவித்தார்🔈. மேலும், நாளுக்கு நாள் ஊட்டிக்கு படையெடுக்கும் சுற்றுலா வாசிகளுக்கு, 🚗வாகன நிறுத்துமிட வசதி, 🚰குடிநீர் வசதி, சாலை வசதி, 🚽கழிப்பிட வசதி ஆகிய தேவையான வசதிகளை செய்து தருவது குறித்து அவர் மாவட்ட ஆட்சியரிடம் அறிவுறுத்தியதாக தெரிவித்தார்🔈.
COMMENTS