ஆற்றுக்கு அடியில் மெட்ரோ ரயில்
நாட்டிலேயே முதன் முறையாக ஆற்றின் அடியில் 🚇மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படவுள்ளது👍. இதற்கான பணிகள் ஆற்றின் அடிப்பகுதியில் நடந்து கொண்டிருக்கிறது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா - ஹௌராவை இணைக்கும் வகையில், மெட்ரோ ரயில் பாதை அமைக்க முடிவெடுக்கப்பட்டது😯. இதற்காக, ஹுக்ளி நதிக்கு அடியில் 30 மீட்டர் ஆழத்தில், 60 கோடி💸 ரூபாய் செலவில், சுமார் 520 மீட்டர் தூரத்திற்கு இரண்டு சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டு வருகிறது😱. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கிய இந்த பணிகள் அடுத்த வாரம் முடிவடையும் என்று கூறப்படுகிறது👍. இதனை அடுத்து, இந்த சேவை 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் செயல்படும் என ரயில்வே அமைச்சக 👮அதிகாரி தெரிவித்துள்ளார்🔈 என்பது குறிப்பிடத்தக்கது.
COMMENTS