குழந்தைகளின் 📚படிப்பிற்காக கிட்னியை விற்க தயாராக இருக்கும் தாய்😳
தனது குழந்தைகளை 📚படிக்க வைப்பதற்காக தனது கிட்னியை விற்க தயாராக உள்ளதாக 👩பெண் ஒருவர் 💻முகநூலில் பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்🎙, "உ.பி.,யின் ரோகாடா நகரின் எகோ காலனியில் 330 சதுர அடி அறை கொண்ட வீட்டில் 8 பேருடன் வசித்து வருகிறேன். ரூபாய் நோட்டு வாபசால், எங்களது துணி வியாபாரம் பாதிக்கப்பட்டு நாங்கள் வறுமையில் தள்ளப்பட்டுள்ளோம். இதனால், எங்களது குழந்தைகள் பள்ளி கட்டணத்தை செலுத்த முடியவில்லை. குழந்தைகள் பள்ளி செல்லவில்லை. இதனால் தேவைப்படுவோருக்கு எனது கிட்னியை விற்க தயாராக உள்ளேன்"என்று கூறியுள்ளார்😟. ஆர்த்தியின் கணவர் மனோஜ் 🚗டாக்ஸி டிரைவராக பணி புரிந்து வருகிறார். அவருக்கு வரும் வருமானம் வீட்டின் வாடகைக்கும் சாப்பாடு செலவிற்கும் சரியாக இருக்கும் என்று தெரிகிறது.மனோஜ் இதுகுறித்து பேசுகையில்,'மாவட்ட நிர்வாகம் ஏதேனும் உதவி செய்தால் நாங்கள் ஏதாவது தொழில் செய்து எங்கள் பிள்ளைகளை படிக்க வைப்போம்'. என்று மனோஜ் கூறினார்😯 அவர் கூறுகையில்🎙, தங்களது குழந்தைகள் ஐ.ஏ.எஸ்.க்கு படித்து நாட்டிற்கு உழைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்👍.
COMMENTS