சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்த நிலையிலும் எரியும் தீ
சென்னை தி.நகரில் சென்னை சில்க்ஸ் கட்டடம் நேற்று(31ம் தேதி) அதிகாலை 4.45 மணிக்கு திடீரென தீ பிடித்து எரிய ஆரம்பித்தது. நேற்று காலை முதல் தீயணைப்பு துறை வீரர்கள் மீட்பு குழுவினர் உட்பட பலர் தீயை அணைக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். ராச்சத கிரேன்கள் கொண்டுவரப்பட்டு நுரையை பீய்ச்சி அடித்தும் தீ அணைந்த பாடில்லை. இந்நிலையில், சுமார் 23 மணி நேரமாக எரிந்து வரும் சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அந்த பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். தற்போது கட்டடத்தின் உட்பகுதி எரிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
COMMENTS