மாணவர் சேர்க்கைக்கு 4 மருத்துவ கல்லூரிகளுக்கு தடை
தமிழகத்தில், உள்ள 4⃣மருத்துவ கல்லூரிகளில், 2017-18 மற்றும் 2018-19 ஆகிய ஆண்டுகளுக்கான மாணவர் சேர்க்கையை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது. அன்னை மருத்துவக் கல்லூரி, பென்னலூர்- காஞ்சிபுரம் மேலும், மாதா மருத்துவக் கல்லூரி மற்றும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ அறிவியல் நிறுவனம் ஆகியவை தற்போதைய கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையினை தடை செய்துள்ளது.மேலும், கோயம்புத்தூர் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கழகமும் மாணவர் சேர்க்கையான தடையை தெரிவித்துள்ளது. வழக்கமாக இந்த கல்லூரிகளில் ஆண்டிற்கு 150 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, மொத்தம் 600 இட ஒதுக்கீட்டினை மாணவர்கள் இழக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து, மத்திய அமைச்சகம் பாரத் பல்கலைக்கழகம் மற்றும் மருத்துவமனையில் வழக்கமாக 150 சீட்கள் மட்டுமே தேர்ந்தெடுக்க அனுமதி அளித்துள்ள நிலையில் தற்போது 250 சீட்கள் வரை சேர்க்க அனுமதி வழங்கியுள்ளது. மேலும், பாண்டிச்சேரியில் உள்ள மருத்துவ கல்லூரியிலும், சேலத்தில் உள்ள அன்னபூர்ணா மருத்துவ கல்லூரியிலும் 150 சீட்கள் சேர்க்க அனுமதி வழங்கியுள்ளது. மேலும் அரசு மருத்துவ கல்லூரிகளில் 15% இட ஒதுக்கீட்டினை இந்தியா முழுவதும் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
இதனை அடுத்து, மத்திய அமைச்சகம் பாரத் பல்கலைக்கழகம் மற்றும் மருத்துவமனையில் வழக்கமாக 150 சீட்கள் மட்டுமே தேர்ந்தெடுக்க அனுமதி அளித்துள்ள நிலையில் தற்போது 250 சீட்கள் வரை சேர்க்க அனுமதி வழங்கியுள்ளது. மேலும், பாண்டிச்சேரியில் உள்ள மருத்துவ கல்லூரியிலும், சேலத்தில் உள்ள அன்னபூர்ணா மருத்துவ கல்லூரியிலும் 150 சீட்கள் சேர்க்க அனுமதி வழங்கியுள்ளது. மேலும் அரசு மருத்துவ கல்லூரிகளில் 15% இட ஒதுக்கீட்டினை இந்தியா முழுவதும் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
COMMENTS