இரவு செய்திகள்-03/06/2017
பீகார் மாநிலத்தில் ஃபேஸ்புக்கில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்ற போஸ்ட் செய்த 15 வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்தனர்.
உததர்காண்ட் உயர்நீதிமன்றம், எந்த ஒரு அரசியல் கட்சியோ, தனி நபர்களோ, ஊடகங்களோ, வாக்களிப்பு இயந்திரத்தின் செயல்பாடு பற்றி விமர்சிக்கக் கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது
தமிழக முன்னாள் முதல்வரும், தி.மு.க தலைவருமான கருணாநிதியின் 94-வது பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் ராகுல் காந்தி, நிதிஷ்குமார், சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
தமிழ் நாட்டிற்கான தபால் தேர்வில் ஹரியானாவை சேர்ந்த பலரும் தமிழ் மொழியில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றது சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில் சி.பி.ஐ விசாரணையில் தேர்வில் முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்க பட்டுள்ளது.
ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் மருத்துவம் படிப்பதற்கான நுழைவுதேர்வு நாளை நாடு முழுவதும் நடைபெறுகிறது.
டில்லி, காஷ்மீர் உள்ளிட்ட இடங்களில் தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் நடத்தும் சோதனையில் ரூ.1.5 கோடி பணம், லஷ்கர், ஹிஸ்புல் பயங்கரவாத அமைப்புகளில் லெட்டர் பேட், பென்டிரைவ், லேப்டாப்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரானை சந்தித்து பேசினார். சர்வதேச விவகாரம், பயங்கரவாத தடுப்பு, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல பிரச்னைகள் பற்றி ஆலோசனை நடத்தினர்.
வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியாது : தலைமை தேர்தல் ஆணையர் விளக்கம்
ஜூன் 6ல் நாடே திரும்பிப் பார்க்கும் 41 அறிவிப்புகள் வெளியிடப்படும் - செங்கோட்டையன்
மணிப்பூரில் குண்டுவெடிப்பு: 3 வீரர்கள் காயம்
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு
அட்டர்னி ஜெனரல், சொலிசிட்டர் ஜெனரல் பதவிக்காலம் நீட்டிப்பு
திமுகவை கட்டிக்காப்பார் தளபதி ஸ்டாலின். இந்த இயக்கத்தை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது என்றும் துரைமுருகன் கூறியுள்ளார்.
சர்ஜிகல் ஸ்ட்ரைக்குக்கு பின் பாகிஸ்தான் ஊடுருவல்கள் குறைந்தன : ராஜ்நாத் சிங்
இந்தியாவின் முதல் கனரக ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட், இந்திய தொழில்நுட்பத்தில் புதிய சாதனை படைக்க ஜூன் 5-ம் தேதி விண்ணில் பாயவுள்ளது. இதற்கான 'கவுன்ட்டவுன்' இன்று துவங்குகிறது.
உத்தரப்பிரதேசத்தில் பல்வேறு மாவட்டங்களில் நான் பயணம் மேற்கொள்ளும் போதும், நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போதும் எனக்கு சிறப்பு ஏற்பாடுகள், வசதிகள் ஏதும் வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட முதல்வர் ஆதித்யநாத், ‘நான் தரையில் கூட உட்கார்ந்து கொள்வேன்’ என தெரிவித்துள்ளார்
சென்னை புரசைவாக்கத்தில் உள்ள வணிக வளாகத்தில் பெரும் தீ விபத்து
அரசு பள்ளி மாணவர்களுக்கான மாற்றுச் சான்றிதழில் ஆதார் எண் மற்றும் மாணவர் வருகை நாட்களை குறிப்பிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி இந்தாண்டு அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளிலிருந்து வேறு பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு, இதுபோன்ற விபரங்கள் அடங்கிய, மாற்று சான்றிதழ் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய மாற்று சான்றிதழில், 18 விதமான விபரங்கள் பதிவு செய்யப்பட உள்ளன. முதல்முறையாக, ஆண், பெண் இனத்துடன், 3ம் பாலினம் சேர்க்கப்பட்டு உள்ளது.
உலகிலேயே அதிகமான முஸ்லிம்கள் வாழும் நாடு இந்தியா என்கிறபோதிலும், ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு, இந்தியாவில் காலூன்ற முடியாமல், தோல்வி அடைந்துவிட்டது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதத்தோடு தெரிவித்தார்
கட்சி இணைந்திருக்கும் என்ற எண்ணத்தில் தான் டெல்லியில் இருந்து வந்தேன் என்று டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
மதுராந்தகம் அருகே பழுதாகி நின்ற அரசு பஸ் மீது லாரி மோதியதில் சிறுமி உள்பட 3 பேர் உடல் நசுங்கி இறந்தனர். படுகாயம் அடைந்த 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.
உ.பி., மாநிலத்தை சேர்ந்த பா.ஜ., பெண் எம்.பி., விமானத்தில் செல்ல கத்தியுடன் வந்து, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சமூக வலைதளத்தில் கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவிக்கும் ஹேஸ்டேக் இந்தியாவில் முதலிடம் பெற்றுள்ளது.
ஐதராபாத்தில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முயன்ற 5 பேர் கைது
சென்னையில் ரெயில் தண்டவாளத்தை கடக்க முற்பட்டு ரெயிலில் அடிப்பட்டு இறந்தவர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் முதல் 4 மாதத்துக்குள் 28 சதவீதம் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
பெண்களின் மீதான வன்முறைகளுக்கு காதலர் தினம்தான் காரணம் என்று ஆர்.எஸ் எஸ் தலைவர் தெரிவித்துள்ளது கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சி.பி.ஐ. ரெய்டுக்கு பயந்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அலுவலகத்தில் வேலை செய்ய ஒரு டஜனுக்கும் அதிகமான அதிகாரிகள் மறுத்துவிட்டனர்
ஆந்திரா: ரூ.1 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் சரண்
கனடா தேசிய கீதத்தை தமிழில் வெளியிட்டு அந்நாட்டு அரசு தமிழர்களை கவுரவப்படுத்தி உள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் கல்லறையில் நடந்த குண்டுவெடிப்பில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பிற்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
தாய்லாந்து பாட்மின்டன்: செய்னா தோல்வி
COMMENTS