இன்றைய பரபரப்பு செய்திகள் 02/06/17
கோவை மாவட்டம் போத்தனூர் கணேசபுரத்தில் யானை தாக்கி 4 பேர் பலி.
டில்லியில் மிதமான நிலநடுக்கம் ரிக்டரில் 4.7 ஆக பதிவு.
டெல்லி மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் பற்றாக்குறை விவகாரத்தை லஞ்ச ஒழிப்புத் துறை கையில் எடுத்து விசாரணையை தொடங்கியுள்ளது.
சவுதி அரேபியாவின் ஷியைட்டுகள் வசிக்கும் பகுதியில் குண்டுவெடிப்பு.
குல்பூஷண் ஜாதவை தூக்கில் போட மாட்டோம் - பாகிஸ்தான் அறிவிப்பு.
ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர முயன்ற அமெரிக்க விமானப்படை முன்னாள் வீரருக்கு 35 ஆண்டு சிறை.
சென்னை சில்க்ஸ் தீ விபத்து : ரூ.420 கோடி மதிப்பு பொருள்கள் நாசம்.
சென்னை சில்க்ஸ் கட்டடம் இடிக்கும் பணி நடைபெற இருப்பதால் உஸ்மான் ரோட்டில் போக்குவரத்து நிறுத்தம்.
சென்னை சில்க்ஸ் கட்டட தீயை அணைக்க தண்ணீருக்கான செலவு ரூ.30 லட்சமாகும் : ரூ.30 லட்சம் அரசுக்கு செலுத்தப்பட்டதாக சென்னை சில்க்ஸ் மேலாளர் தகவல்.
சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்க ரப்பீஸ் கொட்டும் பணிகள் குறித்து காவல் துணை ஆணையர் சரவணன், பொதுப் பணித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
சென்னை, மதுரவாயல் அடுத்த வானகரத்தில் அமைந்துள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பாதிக்கப்பட்ட மாணவர் சூரஜ் அவர்களை சந்தித்து ஆறுதல் கூற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று (2-6-2017) காலை 10.00 மணிக்கு மருத்துவமனைக்கு செல்கிறார்.
மாவட்ட நுகர்வோர் நீதிபதிகள் பணிக்கு நேர்முகத் தேர்வு முடிவை வெளியிட ஐகோர்ட் தடை.
கவிக்கோ அப்துல் ரஹ்மான் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார்.
டில்லி பர்ஹாம்பா மெட்ரோ ரயில் நிலையத்தில் பயங்கர தீ.
கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றப்பத்திரிக்கையை தமிழில் வழங்கக்கோரி யுவராஜ் மனு தாக்கல் செய்தார்.இந்த மனுவை நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
வேலூர் : கொலை, கொள்ளை, வழிப்பறி போன்றவற்றில் ஈடுபட்டுவந்த விக்னேஸ்வரன் என்பவர் குண்டர் சட்டத்தில் கைது - அரக்கோணம் போலீசார் நடவடிக்கை.
COMMENTS