இன்றைய திருக்குறள்:
(Today's Thirukkural):
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.
(பொருட்பால், அரசியல், காலம் அறிதல், 490)
மு.வ உரை :
பொறுத்திருக்கும் காலத்தில் கொக்குப் போல் அமைதியாக இருக்க வேண்டும் காலம் வாய்த்த போது அதன் குத்து போல் தவறாமல் செய்து முடிக்க வேண்டும்.
மற்றொரு உரை :
காலம் கைகூடும் வரையில் கொக்குபோல் பொறுமையாகக் காத்திருக்கவேண்டும். காலம் வாய்ப்பாகக் கிடைத்ததும் அது குறி தவறாமல் குத்துவது போல் செய்து முடிக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை :
ஒடுங்கி இருக்க வேண்டிய நேரத்தில் கொக்கைப் போல் ஒடுங்கிக் காத்து இரு. செயற்படும் நேரம் வந்தபோது கொக்கு தவறாமல் தன் இரையைக் குத்திப் பிடிப்பதுபோல் பிழையின்றிச் செய்து முடி.
English Translation:
Kural: 490
Kokkokka Koompum Paruvaththu Matradhan
Kuththokka Seerththa Itaththu
Explanation:
At the time when one should use self-control let him restrain himself like a heron; and let him like it strike when there is a favourable opportunity.
COMMENTS