திநகர் சென்னை சில்க்ஸ் பயங்கர 🔥தீவிபத்து😱
தி.நகரில் உள்ள பிரபல துணி கடையான சென்னை சில்க்.ல் இன்று காலை 4.45 மணியளவில் தீ பிடித்து எரிய ஆரம்பித்தது😱. கட்டிடத்தின் அடிப்புறத்தில் இருந்தே தீ எரிய ஆரம்பித்துள்ளது😯. தொடர்ந்து பல மணி நேரமாக போராடியும் தீயை அணைக்க முடியவில்லை😟. புகையும் தொடர்ந்து வெளியேறி வருகிறது. மேலும், 🔥தீ.யின் வெப்பம் அதிகமாக உள்ளதால் கட்டிடத்தில் உள்ள கண்ணாடிகளும் உடைந்து வருகிறது😳. தொடர்ந்து தீ எரிந்து வருவதால், அப்பகுதி அபாயகரமான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது🔈. இதனால் அப்பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது😳. புகையால் 7⃣மாடி கட்டிடத்தின் உறுதி தன்மை பாதிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால், தீ பிடித்து எரிந்ததால் லட்சதிர்ற்கு மேலான துணிகள் எரிந்துள்ளதாக தெரிகிறது. மேலும்,பாதுகாப்பு கருதி தீவிபத்து ஏற்பட்ட கடையை சுற்றி உள்ள 100 க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டு, அங்கு தங்கி இருக்கும் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்👍. மேலும், அந்த வழியில் செல்லும் 🚗வாகனங்களும் மாற்று வழியில் அனுப்பப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது😳.
COMMENTS