மாற்று திறனாளிகளுக்கு அதிக இடஒதுக்கீடு-முதல்வர் அறிக்கை
♿மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 3⃣சதவீதமாக இருந்த இட ஒதுக்கீட்டை 4⃣சதவீதமாக உயர்த்தி முதல்வர் 💺எடப்பாடி பழனிசாமி புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார்👍. அதன் படி அவர் கூறியிருப்பதாவது🎙,"1981ம் ஆண்டு முதல் தமிழகத்தில் ஊனமுற்றோருக்கு 3⃣சதவீதம் தான் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் 2016-ன் படி, மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு பணியிடங்களில் 4 சத வீதம் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அதனடிப்படையில், ஏற்கனவே நடைமுறைப்படுத்தி வந்த 3⃣சதவீதம் இடஒதுக்கீட்டினை, 4⃣சதவீதமாக தமிழக அரசு பணிகளிலும் உயர்த்தி வழங்க நான் ஆணையிட்டுள்ளேன்". என்று கூறியுள்ளார்😯. அதன் படி,
🔰பார்வை குறைவுடையோருக்கு 1%
🔰செவித்திறன் குறைபாடு உள்ளவர்க்கு 1%
🔰கை, கால் பாதிக்கப்பட்டோர், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டோர், குள்ளத்தன்மையுடையோர், அமில வீச்சினால் பாதிக்கப்பட்டோர், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர் ஆகியோருக்கு 1%
🔰புற உலகு சிந்தனையற்றவர், மன நலம் பாதிக்கப்பட்டவர் உள்ளிட்டோருக்கு 1%
மேலும், இந்த ஒதுக்கீடு, அனைத்து அரசு பணியிடங்கள், பொதுத்துறை நிறுவனம், வாரியம், உள்ளாட்சி அமைப்பு, கல்வி நிறுவனம், அரசு நிதியுதவி பெறும் அமைப்புகளுக்கு பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது👍.
COMMENTS