'நீட்' தேர்வு✍ முடிவுகளை வெளியிட இடைக்கால தடை
'நீட்' தேர்வு முடிவுகளை✍ வெளியிட இடைக்கால 🚫தடையினை மதுரை 🏛உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது⚖. நீட் தேர்வு எழுதிய மாணவ மாணவிகள் இந்த தேர்வை செல்லாது🚫 என்று அறிவிக்க வேண்டும்🔈 என்று கூறி 🏛உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்👍. அந்த மனுவில், கடந்த மே.7ம் தேதி நடத்தப்பட்ட மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வினை பல மொழி மாணவர்கள் எழுதினர்✍. ஆனால், 📄வினாத்தாள்கள் ஒரே மாதிரியான வினாக்களை கொண்டதாக கொடுக்கப்படவில்லை😳. தமிழில் இருந்த கேள்விகளுக்கும், ஆங்கில வினாத்தாள்களில் இருந்த வினாக்களுக்கும் மிகுந்த வித்யாசம் காணப்பட்டது😳. எனவே, இந்த தேர்வினை செல்லாது🚫 என்று கூறி, தேர்வு முடிவுகளை வெளியிடவும் தடை🚫 விதிக்கப்பட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது👍. இதனை விசாரித்த 🏛நீதிமன்றம் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை🚫 விதித்துள்ளது. மேலும், இதுகுறித்து மருத்துவ கவுன்சில் 🎙விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், இந்த வழக்கின் விசாரணை வரும் ஜூன் 7ம் தேதி ஒத்திவைப்பதாகவும் உத்தரவிட்டுள்ளது⚖ என்பது குறிப்பிடத்தக்கது.
COMMENTS