தேர்தல்🗳 ஆணையத்துக்கு உயர் நீதி மன்றம்⚖ எச்சரிக்கை
மே 14-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை🗳 நடத்தாவிட்டால் நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாக நேரிடும் என்று மாநில தேர்தல் ஆணையத்தை உயர் நீதிமன்றம்⚖ எச்சரித்துள்ளது.
உள்ளாட்சித் தேர்தலை நடத்த கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் சார்பில் திங்கட்கிழமை மனு📑 தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவுக்கு மறுப்பு❌ தெரிவித்து , பிரச்சினைகளை தீர்க்கவே நீதிமன்றம், அரசை நடத்த அல்ல என்று தெரிவித்தது நீதி மன்றம்⚖. மேலும், மே 14-ம் தேதிக்குள்📆 உள்ளாட்சி தேர்தலை நடத்தாவிட்டால் நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாக நேரிடும் என்றும் எச்சரித்துள்ளனர்.
COMMENTS