பார்வையற்றோருக்கு பாதையாய் நாமிருப்போம்
மாற்றுத் திறனாளிகளின் மறுவாழ்வுக்குக் கைகொடுப்போம்
பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான தன்னார்வத் தொண்டு நிறுவனமான ஜெகஜோதியும் நற்றிணையும் இணைந்து நடத்தும் பார்வை மாற்றுத் திறன் மாணவர்களுக்கான கணிப்பொறி பயிற்சி வகுப்புகள் எதிர்வரும் 26.12.2016 முதல் 30.12.2016 வரை ஐந்து நாட்கள் திருச்சி, துவாக்குடியில் அமைந்துள்ள NIT நிறுவனத்தில் நடைபெற உள்ளது.
மாணவர்களின் உணவுத் தேவைக்காகவும் தங்குமிடம் மற்றும் பயிற்சி அளிப்போருக்கான கட்டணத் தொகை உள்ளிட்ட தேவைகளுக்காகவும் நிதிஉதவி தேவைப்படுகிறது, நிதிஉதவி அளிக்க விரும்பும் அன்பு உள்ளங்கள் info@natrinai.org என்ற முகவரிக்கு இ-மெயில் அனுப்பி வங்கி எண் போன்ற விபரங்களைப் பெற்றுக் கொள்ளலாம். நற்றிணையின் தொடர்பு எண்ணான 8220999799 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
சிறுதுளிதானே பெருவெள்ளம். ஒவ்வொருவரும் செய்யும் சிறிய உதவி மிகப்பெரிய உதவியாக பரிணமிக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
சக உறவுகளை சந்தோஷப்படுத்துவோம்.
அவர்களின் வளர்ச்சிக்கு நாமும் உதவுவோம்.
மனம் திறப்போம்! மனிதம் காப்போம்!!
COMMENTS