2050 தமிழகம் ஒரு கற்பனை
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 100-வது வயதை முன்னிட்டு பிறந்த நாளான டிசம்பர் 12-ஆம் தேதி அரசியலுக்கு வருவது பற்றி தெளிவான ஒரு முடிவு எடுக்கப்போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது.
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையை ஆறு மாத காலத்திற்குள் சுமூகமாக தீர்த்து வைக்க மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
35 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன மலேசிய விமானத்தை ‘கேப்டன்’ விஜயகாந்த் கண்டுப்பிடித்தார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான சாந்தனு, பேரறிவாளன், முருகன் ஆகியோரது தீர்ப்பு வழக்கு ஒத்திவைப்பு.
உலகிலேயே அதிக மக்கள் தொகை உள்ள முதல் நாடான சீனாவின் சாதனையை இந்திய முறியடித்தது.
நாளை முதல் 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவிப்பு. 10,000, 20,000, 50,000 ரூபாய் மட்டுமே செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பால் விலை லிட்டருக்கு 800 ரூபாய் குறைப்பு. தாய்மார்கள் மகிழ்ச்சி.
எந்த நிலையிலும் மருதநாயகம் படம் வெளியாகும். கமலஹாசன் தனது பேரனின் திருமண விழாவில் அறிவித்தார்.
இலங்கை கடற்படையினரால் 11 மீனவர்கள் சிறைப்பிடிப்பு. தமிழக கடலோரப் பகுதிகளில் பதட்டம் நீட்டிப்பு. வைகோ, நெடுமாறன் கண்டனம்.
அரசு வழங்கி வரும் மாணவ, மாணவிகளுக்கான இலவச கார் வழங்கும் திட்டத்தில், ஊழல் நடந்துள்ளதாக எதிர் கட்சியினர் வெளி நடப்பு.
தாது மணல் விவகாரம் குறித்து ‘சகாயம்’ ஐ.ஏ.எஸ் அறிக்கையின் மீதுள்ள விசாரணை ஒத்திவைப்பு.
தஞ்சாவூர் மாவட்டத்தில் வாழ்ந்த ஒரு விவசாயம் குடும்பம் கண்டுப்பிடிப்பு.
COMMENTS